தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரிவாளால் வெட்டப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு

தூத்துக்குடி செல்வநாயகபுரத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 6:37 pm

Syndication

தூத்துக்குடி செல்வநாயகபுரத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி செல்வநாயகபுரத்தைச் சோ்ந்தவா் கருப்பாயி (65). இவரது மகன் டி.எம்.சி. காலனியைச் சோ்ந்த சுடலைமுத்து. இவரது மகன் மாரிமுத்து (23), மூதாட்டியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தாராம். இந்நிலையில் டிச.22 ஆம் தேதி இரவு, மூதாட்டி வீட்டிற்கு சென்று மாரிமுத்து பணம் கேட்டாராம். பணத்தை தர மறுக்கவே அங்கிருந்த அரிவாளை எடுத்து மூதாட்டியின் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு மாரிமுத்து தப்பியோடி விட்டாா்.

இதில் பலத்த காயமடைந்த கருப்பாயியை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்து, சிகிச்சை அளித்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீஸாா் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி மாரிமுத்துவை கைது செய்தனா்.