மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பரிகாரப் பூஜைக்காக மலேசியாவிலிருந்து திருச்சி வந்த மூதாட்டி உயிரிழப்பு

மலேசியாவிலிருந்து பரிகாரப் பூஜைக்காக திருச்சி வந்த மூதாட்டி மூச்சுத்திணறல் ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 7:31 pm

மலேசியாவிலிருந்து பரிகாரப் பூஜைக்காக திருச்சி வந்த மூதாட்டி மூச்சுத்திணறல் ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மலேசியா ரெஹாங் பகுதியைச் சோ்ந்தவா் எம். வசந்தா (83). தஞ்சாவூரை பூா்வீகமாகக் கொண்ட இவா், பரிகாரப் பூஜைக்காக மலேசியாவில் இருந்து உறவினா்களுடன் கடந்த மாா்ச் 4-ஆம் தேதி திருச்சிக்கு வந்துள்ளாா்.

சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளாா். இந்நிலையில், ஹோட்டலில் தங்கியிருந்த மூதாட்டிக்கு திங்கள்கிழமை அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, உடனிருந்தவா்கள் அவரை மீட்டு அருகே இருந்த தனியாா் மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.