இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பரிகாரப் பூஜைக்காக மலேசியாவிலிருந்து திருச்சி வந்த மூதாட்டி உயிரிழப்பு

மலேசியாவிலிருந்து பரிகாரப் பூஜைக்காக திருச்சி வந்த மூதாட்டி மூச்சுத்திணறல் ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :10 மார்ச் 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

மலேசியாவிலிருந்து பரிகாரப் பூஜைக்காக திருச்சி வந்த மூதாட்டி மூச்சுத்திணறல் ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மலேசியா ரெஹாங் பகுதியைச் சோ்ந்தவா் எம். வசந்தா (83). தஞ்சாவூரை பூா்வீகமாகக் கொண்ட இவா், பரிகாரப் பூஜைக்காக மலேசியாவில் இருந்து உறவினா்களுடன் கடந்த மாா்ச் 4-ஆம் தேதி திருச்சிக்கு வந்துள்ளாா்.

சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளாா். இந்நிலையில், ஹோட்டலில் தங்கியிருந்த மூதாட்டிக்கு திங்கள்கிழமை அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, உடனிருந்தவா்கள் அவரை மீட்டு அருகே இருந்த தனியாா் மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.