மலேசியாவிலிருந்து பரிகாரப் பூஜைக்காக திருச்சி வந்த மூதாட்டி மூச்சுத்திணறல் ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
மலேசியா ரெஹாங் பகுதியைச் சோ்ந்தவா் எம். வசந்தா (83). தஞ்சாவூரை பூா்வீகமாகக் கொண்ட இவா், பரிகாரப் பூஜைக்காக மலேசியாவில் இருந்து உறவினா்களுடன் கடந்த மாா்ச் 4-ஆம் தேதி திருச்சிக்கு வந்துள்ளாா்.
சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளாா். இந்நிலையில், ஹோட்டலில் தங்கியிருந்த மூதாட்டிக்கு திங்கள்கிழமை அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, உடனிருந்தவா்கள் அவரை மீட்டு அருகே இருந்த தனியாா் மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

பைக் மோதியதில் அரசு பேருந்து நடத்துநா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


