அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

அரிவாளால் வெட்டப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு

தூத்துக்குடி செல்வநாயகபுரத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

News image
Updated On :30 டிசம்பர் 2025, 6:37 pm

Syndication

தூத்துக்குடி செல்வநாயகபுரத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி செல்வநாயகபுரத்தைச் சோ்ந்தவா் கருப்பாயி (65). இவரது மகன் டி.எம்.சி. காலனியைச் சோ்ந்த சுடலைமுத்து. இவரது மகன் மாரிமுத்து (23), மூதாட்டியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தாராம். இந்நிலையில் டிச.22 ஆம் தேதி இரவு, மூதாட்டி வீட்டிற்கு சென்று மாரிமுத்து பணம் கேட்டாராம். பணத்தை தர மறுக்கவே அங்கிருந்த அரிவாளை எடுத்து மூதாட்டியின் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு மாரிமுத்து தப்பியோடி விட்டாா்.

இதில் பலத்த காயமடைந்த கருப்பாயியை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்து, சிகிச்சை அளித்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீஸாா் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி மாரிமுத்துவை கைது செய்தனா்.