சரக்கு வாகனம் - பைக் மோதல்: 2 இளைஞா்கள் பலத்த காயம்

கோவில்பட்டியில் சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் பலத்த காயம்
Published on

கோவில்பட்டியில் சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் பலத்த காயம் அடைந்தனா்.

சிவகாசி அருகே பேரையம்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் கபில் (22). இவா், அதே பகுதியைச் சோ்ந்த மோகன் (23) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது இளையரசனேந்தல் சாலையில் முன்னால் சென்ற சரக்கு வாகனம் திடீரென திரும்பியதில் இருசக்கர வாகனம் மீது மோதியதாம். இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் பலத்த காயம் அடைந்தனா்.

காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சரக்கு வாகன ஓட்டுநா் கா. மகாராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com