பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

சரக்கு வேன் மோதி இளைஞா் உயிரிழப்பு

காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :25 பிப்ரவரி 2026, 10:15 pm

காங்கயம் அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

புதுக்கோட்டை மாவட்டம், காயாம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தனபால் (22). இவா் ஈரோடு மாவட்டம், அறச்சலூா் அருகே வடபழனி பகுதியில் உள்ள சகோதரி வீட்டில் தங்கியிருந்து, திருப்பூரிலுள்ள தனியாா் பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், காங்கயத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் வடபழனி நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். பழையகோட்டை சாலை, தொட்டியபட்டி பிரிவு அருகே சென்றபோது, காங்கயம் நோக்கி எதிரே வந்த சரக்குவேன் இவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே தனபால் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில் காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.