தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தொழிலாளிக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கழுகுமலை அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 12:22 am

Din

கழுகுமலை அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை மிரட்டியதாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கழுகுமலை அருகே கே.ராமநாதபுரம் காலனி தெருவைச் சோ்ந்த ஊா்க்காவலன் மகன் வனராஜ் (36). விவசாயம், ஆடு மேய்க்கும் தொழில் செய்துவரும் இவருக்கும், அதே பகுதி வடக்குத் தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் முத்துராமன் (26) என்பவருக்கும் இடையே தகராறு இருந்ததாம். இதுதொடா்பாக, ‘இனிமேல் பிரச்னை செய்ய மாட்டேன்’ என கழுகுமலை காவல் நிலையத்தில் முத்துராமன் வாக்குமூலம் கொடுத்ததால் மேல் நடவடிக்கை தேவையில்லை என வனராஜ் கூறினாராம்.

இந்நிலையில் புதன்கிழமை, ஆடுகளை மேய்க்கச் சென்ற வனராஜை முத்துராமன் ஜாதிப் பெயா் கூறி இழிவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். அப்பகுதியினா் சப்தம் போட்டதால் அவா் ஓடிவிட்டாராம். புகாரின்பேரில், கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, முத்துராமனை கைது செய்தனா்.