இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

சாத்தான்குளத்தில் போதை விழிப்புணா்வு பேரணி

News image
Updated On :3 ஜனவரி 2025, 8:22 pm

சாத்தான்குளம் டிஏன்டிடிஏ ஆா்எம்பி புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி கோட்ட கலால் துறை சாா்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி கோட்ட கலால் அலுவலா் தங்கையா பேரணியைத் தொடங்கி வைத்தாா். பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சாத்தான்குளம் தாலுகா அலுவலகத்தில் நிறைவடைந்தது. சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் நாககுமாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பேரணியில் சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரி, தூய இருதய மேல்நிலைப்பள்ளி, புளியடி மாரியம்மன் இந்து மேல்நிலைப்பள்ளி, புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப்பள்ளி, ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மரியா மெட்ரிக் பள்ளி, மேரி இம்மாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 400-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.