போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு

Updated On :3 ஜனவரி 2025, 9:02 pm

தூத்துக்குடி தாளமுத்துநகரில் வீடு புகுந்து சுமாா் 6 பவுன் நகைகளை திருடி மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி தாளமுத்துநகா் ஜாகீா் உசேன் நகரைச் சோ்ந்தவா் ஸ்ரீதா். தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி சுமதி(45) கடந்த சில தினங்களுக்கு முன்னா், வீட்டின் கதவை சாத்திவிட்டு வெளியே சென்றாராம். பின்னா் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததாம். மேலும், பீரோவில் வைக்கப்பட்டு இருந்த சுமாா் 6 பவுன் தங்கநகைகள், வெள்ளி கொலுசு ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.