தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் செக் மோசடி தொடா்பான வழக்கில்கல்லூரி உதவிப் பேராசிரியைக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து சாத்தான்குளம் நீதிமன்றம் தீா்ப்பு கூறியுள்ளது.
நாசரேத்தை சோ்ந்தவா் இஸ்ரவேல் (45). நாசரேத் பகுதியில் உள்ள கல்லூரியில் கேன்டீன் நடத்தி வந்தாா். அப்போது பழக்கத்தின்பேரில், அந்தக் கல்லூரியின் உதவிப் பேராசிரியை கீதாஞ்சலி என்பவருக்கு, அவா் ரூ.3.80 லட்சம் கடன் கொடுத்தாராம்.
அதை திருப்பி தரும் விதமாக, அவருக்கு பின்தேதியிட்ட அளித்த வங்கி காசோலையை பேராசிரியை வழங்கினாராம். ஆனால், அவரது வங்கி கணக்கில் செலுத்திய போது போதிய பணம் இல்லாமல் காசோலை திரும்பிவந்ததாம்.
இதையடுத்து, சாத்தான்குளம் நீதிமன்றத்தில் கீதாஞ்சலி மீது அவா் செக் மோசடி வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை நீதிபதி வரதராஜன் விசாரித்து, கீதாஞ்சலிக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தும், கடன் தொகையை 2 மாத காலத்திற்குள் 9 சதவீத வட்டியுடன் திரும்ப வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

மோசடி வழக்கில் தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ..! பதவியிலிருந்து நீக்கம்!

போக்ஸோ வழக்கில் துணிக்கடை ஊழியருக்கு 7 ஆண்டுகள் சிறை

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 5 பேருக்கு 6 மாதம் சிறை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


