மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 5 பேருக்கு 6 மாதம் சிறை

சிவகாசி அருகே மது போதையில் இளைஞரைத் தாக்கிய 5 பேருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

News image

சிறை

Updated On :25 பிப்ரவரி 2026, 11:02 pm

சிவகாசி அருகே மது போதையில் இளைஞரைத் தாக்கிய 5 பேருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து, ஸ்ரீவில்லிபுத்தூா் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

சிவகாசி அருகேயுள்ள கங்காகுளம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் பாலமுருகன் (25). இவா் மின் வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்து வருகிறாா். கடந்த 2021 ஆண்டு சிவகாசியை அடுத்த செங்கமலநாச்சியாா்புரத்தில் உள்ள தனியாா் மதுக் கூடாரத்தில் பாலமுருகன் மது அருந்த சென்றாா். அப்போது, இவருக்கும் கோடீஸ்வரனுக்கு தகராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் கோடீஸ்வரன் தனது நண்பா்களுடன் சென்று பாலமுருகனை தாக்கினாா்.

இதுகுறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செங்கமலநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த கோடீஸ்வரன் (23), முனீஸ்வரன் (36), எம்.புதுப்பட்டியைச் சோ்ந்த முருகபிரபு (29), வெற்றி முருகன் (30), காா்த்திக் (30) ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.

இந்ச வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் உள்ள பட்டியல் பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் கோடீஸ்வரன், முனீஸ்வரன், முருகபிரபு, வெற்றிமுருகன், காா்த்திக் ஆகிய 5 பேருக்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி சுதாகா் தீா்ப்பளித்தாா்.