தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சமத்துவ பொங்கல் விழா: திமுகவினருக்கு அமைச்சா் வேண்டுகோள்

தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை, சமத்துவ பொங்கல் விழாவாகக் கொண்டாடுமாறு, கட்சியினருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக அமைச்சருமான பெ.கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 8:57 pm

Din

தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை, சமத்துவ பொங்கல் விழாவாகக் கொண்டாடுமாறு, கட்சியினருக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும், தமிழக அமைச்சருமான பெ.கீதாஜீவன் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சியில் மகளிா் உரிமைத் தொகை, பெண்களுக்கு கட்டணமில்லா விடியல் பயணம், தமிழ்ப்புதல்வன், புதுமைப் பெண், மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிா் காப்போம், நம்மை காக்கும் 48, காலை உணவுத் திட்டம், கலைஞா் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதிக வேலைவாய்ப்பு வழங்குவதிலும், அதிக தொழிற்சாலைகளை உருவாக்கியதிலும் தமிழகம் முதல் மாநிலமாக இருக்கிறது.

தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாளை சமத்துவ பொங்கல் திருநாளாக கொண்டாட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளாா். அதன்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சமத்துவ பொங்கல் வைத்து, கட்சிக் கொடியேற்றி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளாா்.