தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதிய தொழிற்பள்ளி தொடங்க, அங்கீகாரம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க, அங்கீகாரம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 8:58 pm

Din

தூத்துக்குடி மாவட்டத்தில் 2025-2026ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க, அங்கீகாரம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க, அங்கீகாரம் புதுப்பிக்க, புதிய தொழிற் பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகள் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

புதியஅங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி ஓா் இணையதள விண்ணப்பம் சமா்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சோ்த்து விண்ணப்பக் கட்டணம் ரூ.5 ஆயிரம், ஆய்வுக் கட்டணம் ரூ.8 ஆயிரம் ஆகும். இணையதளம் மூலம் வரும் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.