36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

தூத்துக்குடி வஉசி துறைமுகத்திற்கு தேசிய விருது

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சரக்குகளை கப்பலில் ஏற்றும் பணி

News image
Updated On :15 ஜூன் 2025, 7:27 am IST

தூத்துக்குடி, ஜூன் 13: தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்திற்கு செலவு நிா்வாகத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டுள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து துறைமுக ஆணையம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி வ.உ. சிதம்பரனாா் துறைமுகத்திற்கு கடந்த 2024 ஆம் ஆண்டிற்கான செலவு நிா்வாகத்திற்காக, இந்திய அடக்கவிலை நிா்ணய கணக்கியல் நிறுவனம் போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவின்கீழ் (முதல் இடம்) தேசிய விருது வழங்கியுள்ளது. இதற்கு முன்பு இவ்விருதை 2008, 2012, 2015, 2016, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ள நிலையில், தற்போது 7-ஆவது முறையாக பெற்றுள்ளது.

சரக்குகள் கையாளும் செயல்பாட்டு திறனை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளிலும் அதன் ஒட்டு மொத்த செலவீனத்தை குறைத்ததற்காக இவ்விருது வழங்கப்பட்டது. மேலும், மனிதவள மேம்பாட்டை மேம்படுத்துதல், சரக்கு கையாளும் திறன் அதிகரிப்பு, நிலையான மின் ஆற்றல் ஆகியவற்றினை கடைபிடித்ததன் மூலம் இச்சாதனை படைக்கப்பட்டுள்ளது.

இதற்கு துறைமுகத்தின் இழுவை கப்பல்களுக்கு தளத்திலிருந்து மின்சாரம் வழங்குதல், மின்சாரத்தினால் இயங்கக் கூடிய வாகனங்களைப் பயன்படுத்துதல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்தல் போன்ற செயல்பாடுகள் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

இதுகுறித்து துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் கூறுகையில், நிதி நிா்வாகத்தின் மீதான துறைமுகத்தின் தொடா்ச்சியான கவனம் 2021-22 -ஆம் நிதியாண்டின் இயக்க விகிதாசாரம் 41.28 சதவீதத்திலிருந்து 2023-24 ஆம் நிதியாண்டில் 29.45 சதவீதமாக குறைய வழிவகுத்தது. இது சிறப்பான தரத்துக்கும் நிலைத்தன்மைக்குமான துறைமுகத்தின் அா்ப்பணிப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.