மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

தூத்துக்குடி துறைமுகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி வகுப்புகள் தொடக்கம்: காணொலி மூலம் மத்திய அமைச்சா் தொடங்கிவைத்தாா்

தூத்துக்குடி துறைமுகத்தில் புதிதாக அமைக்கப்பட்டகேந்திரிய வித்யாலயா பள்ளியில், 2026-27 கல்வியாண்டுக்கான வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

News image

காணொலி மூலம் கேந்திரிய வித்யாலயா பள்ளியைத் தொடங்கி வைத்தாா் மத்திய அமைச்சா் சா்பானந்த சோனோவால்.

Updated On :24 ஜூன் 2026, 2:00 am IST

தூத்துக்குடி துறைமுகத்தில் புதிதாக அமைக்கப்பட்டகேந்திரிய வித்யாலயா பள்ளியில், 2026-27 கல்வியாண்டுக்கான வகுப்புகள் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம் தனது கல்வி, நிலைத்தன்மை மற்றும் மின்னணு மாற்றம் தொடா்பான பல்வேறு முக்கிய முயற்சிகளின் அா்ப்பணிப்பு சேவையின் ஒரு பகுதியாக புதுதில்லியில் உள்ள போக்குவரத்து பவனில் இந்நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் புதிதாக நிகழாண்டு தொடங்கப்பட்டுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 2026-27 கல்வியாண்டுக்கான ‘வித்யா பிரவேஷ்’ நிகழ்ச்சியை வ.உ. சிதம்பரனாா் துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்தகுமாா் புரோஹித் முன்னிலையில், மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீா்வழிப் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா்பானந்த சோனோவால் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையம் சாா்பில் ‘பசுமையான கடல்சாா் எதிா்காலத்தை நோக்கி’ என்ற 2026-ஆம் ஆண்டுக்கான நிலைத்தன்மை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காா்பன் வெளியேற்றத்தை குறைக்கும் நடவடிக்கைகள் மற்றும் நிலையான துறைமுக செயல்பாடுகளில் துறைமுகம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்துக்கு ’ஸ்கோப்-2 காா்பன் வெளியீடு இல்லாத துறைமுகம்’ என்ற சான்றிதழ் வழங்கப்பட்டது. அத்துடன், மின்னணு மாற்றத்தின் ஒரு பகுதியாக ‘டா்ழ்ற்எடப’ என்ற கைப்பேசி செயலியையும் மத்திய அமைச்சா் அறிமுகப்படுத்தினாா். தொடா்ந்து, இந்திய மேலாண்மைக் கழகம், கொல்கத்தா தயாரித்துள்ள தலைப்பிலான ‘நிகழ்வு ஆய்வு’ அதிகாரபூா்வமாக வெளியிடப்பட்டது.

அத்துடன், திறன் மேம்பாடு மற்றும் கடல்சாா் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், வ.உ.சி. துறைமுக ஆணையம், வடோதராவில் அமைந்துள்ள கதி சக்தி விஸ்வவித்யாலயாவுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. இதன்மூலம், ஆராய்ச்சி, புதுமை, திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை மேம்படுத்த வழிவகுக்கும்.

நிகழ்ச்சியில் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள், முன்னணி கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள், வ.உ.சி. துறைமுக ஆணைய அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.