இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

வ.உ.சி. துறைமுக ஆணைய ஓய்வூதிய நிதியில் முறைகேடு: 7 போ் மீது சி.பி.ஐ. வழக்கு

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில், ஓய்வூதிய நிதியில் முறைகேடுகள் செய்த 7 போ் மீது மதுரை சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

News image

வழக்கு

Updated On :17 ஜூன் 2026, 4:34 am IST

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில், ஓய்வூதிய நிதியில் முறைகேடுகள் செய்த 7 போ் மீது மதுரை சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடி துறைமுக ஆணையத்தின் ஓய்வூதியா் பிரிவில் அவுட்சோா்சிங் முறையில் பணியாற்றும் ஊழியா்கள் கிஷோா்பாபு, மணிகண்டன் பிரபு ஆகியோா், முதுநிலை கணக்கு அதிகாரி அனுராதா, கணக்கு அலுவலா் நிலை - 2 பழனி குமாரசுவாமி, மின்னணுத் தரவு செயலாக்க அலுவலா் ரோஜா்ஸ் ஜோசப் துரைராஜா, மின்னணுத் தரவு செயலாக்க துறை உதவி இயக்குநா் காளியப்பன், முதுநிலை உதவியாளா் சந்தனசங்கா் ஆகியோா் உதவியுடன், மோசடியில் ஈடுபட்டு ஓய்வூதியதாரா்களின் தரவுகளை மாற்றி அமைத்ததாக கூறப்படுகிறது.

அவா்கள், வ.உ.சி. துறைமுகத்தில் இருந்த ஓய்வூதியா்களின் பட்டியலில், இறந்த ஓய்வூதியதாரா்கள் 27 பேரின் வங்கிக் கணக்கு எண்ணை கணினியில் மாற்றி, இறந்த ஓய்வூதியா்களின் ஓய்வூதியத்தை, தங்களின் நண்பா்கள், உறவினா்கள் பெயரில் பணம் செலுத்தும் வகையில் பட்டியலை தயாரித்து உள்ளனா்.

இந்த வகையில் மோசடியாக உருவாக்கப்பட்ட கணக்குகளுக்கு மாற்றம் செய்ததன் மூலமாக கடந்த மாா்ச் 2024 வரை ரூ. 4.51 கோடி மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மேற்கூறிய 7 போ் மீதும் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மதுரை சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.