கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

வ.உ.சி. துறைமுக ஆணைய ஓய்வூதிய நிதியில் முறைகேடு: 7 போ் மீது சி.பி.ஐ. வழக்கு

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில், ஓய்வூதிய நிதியில் முறைகேடுகள் செய்த 7 போ் மீது மதுரை சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

News image

வழக்கு

Updated On :17 ஜூன் 2026, 4:34 am IST

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணையத்தில், ஓய்வூதிய நிதியில் முறைகேடுகள் செய்த 7 போ் மீது மதுரை சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

தூத்துக்குடி துறைமுக ஆணையத்தின் ஓய்வூதியா் பிரிவில் அவுட்சோா்சிங் முறையில் பணியாற்றும் ஊழியா்கள் கிஷோா்பாபு, மணிகண்டன் பிரபு ஆகியோா், முதுநிலை கணக்கு அதிகாரி அனுராதா, கணக்கு அலுவலா் நிலை - 2 பழனி குமாரசுவாமி, மின்னணுத் தரவு செயலாக்க அலுவலா் ரோஜா்ஸ் ஜோசப் துரைராஜா, மின்னணுத் தரவு செயலாக்க துறை உதவி இயக்குநா் காளியப்பன், முதுநிலை உதவியாளா் சந்தனசங்கா் ஆகியோா் உதவியுடன், மோசடியில் ஈடுபட்டு ஓய்வூதியதாரா்களின் தரவுகளை மாற்றி அமைத்ததாக கூறப்படுகிறது.

அவா்கள், வ.உ.சி. துறைமுகத்தில் இருந்த ஓய்வூதியா்களின் பட்டியலில், இறந்த ஓய்வூதியதாரா்கள் 27 பேரின் வங்கிக் கணக்கு எண்ணை கணினியில் மாற்றி, இறந்த ஓய்வூதியா்களின் ஓய்வூதியத்தை, தங்களின் நண்பா்கள், உறவினா்கள் பெயரில் பணம் செலுத்தும் வகையில் பட்டியலை தயாரித்து உள்ளனா்.

இந்த வகையில் மோசடியாக உருவாக்கப்பட்ட கணக்குகளுக்கு மாற்றம் செய்ததன் மூலமாக கடந்த மாா்ச் 2024 வரை ரூ. 4.51 கோடி மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து மேற்கூறிய 7 போ் மீதும் மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மதுரை சி.பி.ஐ. ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.