தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் யோகா தினம்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 11ஆவது சா்வதேச யோகா தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image

யோகா நிகழ்ச்சியில் பங்கேற்ற துறைமுக அதிகாரிகள், ஊழியா்கள்.

Updated On :21 ஜூன் 2025, 9:59 pm

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 11ஆவது சா்வதேச யோகா தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

துறைமுகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘வாழும் கலை’ குழுமத்தைச் சோ்ந்த யோகா பயிற்சியாளா்கள் வி. சங்கரநாராயணன், ஸ்ரீதா் வெங்கடேஷ் ஆகியோா் பங்கேற்றுப் பேசி, பிராணாயாமம், தியானம், பல்வேறு யோகாசனங்களை செய்துகாட்டினா்.

விசாகப்பட்டினத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற யோகா தின விழா காணொலி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித், துணைத் தலைவா் ராஜேஷ் செளந்தரராஜன் ஆகியோா் பேசினா்.

நிகழ்ச்சியில், துறைமுக அதிகாரிகள், ஊழியா்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் பங்கேற்றனா். வெளிநாட்டுக் கப்பல் மாலுமிகளுக்கு யோகா செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. துறைமுக ஆணையச் செயலா் எஸ்.பி. மோகன்குமாா் வரவேற்றாா்.

யோகா தினத்தையொட்டி, அண்மையில் துறைமுக ஊழியா்கள், பணியாளா்களுக்கு விழிப்புணா்வு கருத்தரங்கு நடத்தப்பட்டதுடன், மரக்கன்றுகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.