புதிய சுமை ஆட்டோ: பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைப்பு

புதிய சுமை ஆட்டோ: பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைப்பு

புதிய சுமை ஆட்டோவை தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்கும் கயத்தாறு பேரூராட்சித் தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை.
Published on

கயத்தாறு பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுப் பொருள்களை கயத்தாறு வள மீட்பு பூங்காவிற்கு கொண்டு செல்ல, 2024-25 மூலதன மானியத் திட்டம் மூலம் புதிதாக வாங்கப்பட்ட வாகனத்தை (சுமை ஆட்டோ) பேரூராட்சி மன்றத் தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை, பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.

கயத்தாறு பேரூராட்சி செயல் அலுவலா் சுப்பிரமணியன், உதவியாளா் செல்வம், கிழக்கு ஒன்றிய திமுக செயலா் சின்னப்பாண்டியன், சுற்றுச்சூழல் அணி இணை ஒருங்கிணைப்பாளா் ராஜதுரை ஆகியோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com