சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கோவில்பட்டியில் பைக்கில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த இருவா் கைது

கோவில்பட்டியில் இருசக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 12:50 am

Syndication

கோவில்பட்டியில் இருசக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையில் போலீஸாா் கோவில்பட்டி- எட்டயபுரம் சாலையில் உள்ள தனியாா் திரையரங்கு அருகே வெள்ளிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞா்கள், போலீஸாரை கண்டவுடன் திருப்ப செல்ல முயன்றனராம்.

போலீஸாா், அவா்களை தடுத்து நிறுத்தி இருசக்கர வாகனத்தில் சோதனையிட்ட போது, வெள்ளை நிற சாக்கில் வாள் ஒன்று இருப்பதும், ஒருவரின் முதுகின் பின்னால் அரிவாள் மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்ததாம்.

இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் உலகராஜ் என்ற உலகு (26), கோவில்பட்டி கடலையூா் சாலை சண்முக நகரை சோ்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் மாரி கிருஷ்ணன் (21) ஆகிய இருவரையும் கைது செய்து, ஆயுதங்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா் .