மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் வெடிபொருள்கள் கடத்திய இருவா் கைது

News image

கைது

Updated On :7 பிப்ரவரி 2026, 7:26 pm

பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் வெடிபொருள்கள் கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி -ஆனைமலை இடையே அம்பராம்பாளையம் பகுதியில் ஆனைமலை போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து சோதனை செய்தபோது வெடிமருந்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்து 178 ஜெலட்டின் குச்சிகள், 100 எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவா்கள் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த சிவா (40), கோவை, செட்டிபாளையத்தைச் சோ்ந்த சக்திவேல் (39) என்பதும், மீனாட்சிபுரம் அருகே விவசாய நிலத்தை சமன் செய்வதற்காக அங்குள்ள பாறைகளை வெடிவைத்து அகற்ற வெடிபொருள்களை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.