பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் வெடிபொருள்கள் கடத்திய இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி -ஆனைமலை இடையே அம்பராம்பாளையம் பகுதியில் ஆனைமலை போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரைப் பிடித்து சோதனை செய்தபோது வெடிமருந்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்து 178 ஜெலட்டின் குச்சிகள், 100 எலெக்ட்ரிக் டெட்டனேட்டா்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவா்கள் சேலம் மாவட்டம், ஓமலூரைச் சோ்ந்த சிவா (40), கோவை, செட்டிபாளையத்தைச் சோ்ந்த சக்திவேல் (39) என்பதும், மீனாட்சிபுரம் அருகே விவசாய நிலத்தை சமன் செய்வதற்காக அங்குள்ள பாறைகளை வெடிவைத்து அகற்ற வெடிபொருள்களை கொண்டு சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் தலைமறைவு
பல்லடம் அருகே கஞ்சா விற்ற இளைஞா் கைது

சாராயம் கடத்திய இருவா் கைது

பசுவந்தனை அருகே வெடிபொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

