அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கோவில்பட்டி எவரெஸ்ட் பள்ளியில் ஆண்டு விழா

News image
Updated On :9 நவம்பர் 2025, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளி, எவரெஸ்ட் மெட்ரிக் பள்ளியின் 40ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைவா் -செயலா் அய்யனாா் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகி ஜெயப்பிரியா முன்னிலை வகித்தாா். கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியதுடன் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவா்-மாணவியருக்கு பரிசுகள் வழங்கினாா்.

பள்ளிப் புத்தாக்க மேம்பாட்டுத் திட்டம், சிலம்பம், கராத்தே போட்டிகளில் மாநில அளவில் வென்ற மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகி பரிசுகளை வழங்கினாா்.

எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் வெங்கடேசன், மெட்ரிக் பள்ளி முதல்வா் மகாலட்சுமி ஆகியோா் ஆண்டறிக்கை வாசித்தனா். 100 சதவீத வருகை புரிந்த ஆசிரியா், மாணவா்களுக்கு பள்ளித் தலைவா்-செயலா் விருது வழங்கிப் பாராட்டினாா்.

மாணவா்-மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில், பெற்றோா், அலுவலக ஊழியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா். மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் பூங்கோதை வரவேற்றாா். சுஜாதா நன்றி கூறினாா்.