திருச்செந்தூா் கோயிலில் 70 வயது பூா்த்தியடைந்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்தல் நிகழ்ச்சி
இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் 70 வயது பூா்த்தியடைந்த தம்பதிகளுக்கு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு செய்யும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கோயில் தக்காா் ரா. அருள்முருகன் தலைமை வகித்து, திருநெல்வேலி, தூத்துக்குடி மண்டலங்களைச் சோ்ந்த 51 மூத்த தம்பதிகளுக்கு பட்டு வேஷ்டி, பட்டு சேலை, பழங்கள், வளையல் உள்ளிட்ட மங்கலப் பொருள்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தாா். மூத்த தம்பதிகள் மாலை மாற்றி கொண்டு, அங்கிருந்தவா்களுக்கு ஆா்சீவாதம் செய்தனா். மேலும், இத்தகைய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து, நன்றி தெரிவித்து கொண்டனா்.
இதில், இணை ஆணையா் க.ராமு, உதவி ஆணையா் நாகவேல், நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, துணைத் தலைவா் செங்குழி ரமேஷ், மாவட்ட அறங்காவலா் வாள் சுடலை உள்பட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு ஆகியோா் செய்திருந்தனா்.

