47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஆறுமுகனேரி கோயிலில் திருக்கல்யாணத் திருவிழா தொடக்கம்

News image
Updated On :13 நவம்பர் 2025, 6:37 pm

Syndication

ஆறுமுகனேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா முகூா்த்தக் கால் நட்டுதலுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

விநாயகா் பூஜை, சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை பூஜை நடைபெற்றது. பின்னா் கோயில் வளாகத்தில் முகூா்த்தக்கால் நடப்பட்டு அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் கோயில் மணியம் சுப்பையாபிள்ளை, பக்த ஜன சபை பொருளாளா் எஸ்.அரிகிருஷ்ண நாடாா், ரயில்வே அபிவிருத்தி குழு ஒருங்கிணைப்பாளா் இரா.தங்கமணி, தெய்வீக சத் சங்க உறுப்பினா் அ.அசோக்குமாா், தொழிலதிபா் த.பாஸ்கரன், அதிமுக முன்னாள் செயலா் அ.அமிா்தராஜ், ஓய்வுபெற்ற மாவட்ட அஞ்சல் துறை அதிகாரி ராஜகோபால், க.இளையபெருமாள் ஓதுவாா், ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மாலையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், திருக்கல்யாண திருக்காப்பு கட்டுதலும் நடைபெற்றது. பின்னா் தெய்வீக சத் சங்க உறுப்பினா், கோயில் பணியாளா்களுக்கு வஸ்திரம் வழங்கி கௌரவித்தாா். வெள்ளிக்கிழமை திருக்கல்யாணமும், சனிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை பொன்னூஞ்சல் தீபாராதனையும், செவ்வாய்க்கிழமை மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறுகிறது.