நாலுமாவடி பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

நாலுமாவடி பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கல்

இலவச மிதிவண்டியை மாணவருக்கு வழங்குகிறாா் மாவட்ட கல்வி அலுவலா் சிதம்பரநாதன்.
Published on

நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

பள்ளி தலைவா் அழகேசன் தலைமை வகித்தாா். செயலா் நவநீதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலக கண்காணிப்பாளா் அமிா்தசெல்வன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.தலைமை ஆசிரியா் திருநீலகண்டன் வரவேற்றாா். மாவட்ட கல்வி அலுவலா் சிதம்பரநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை 172 மாணவா்களுக்கு வழங்கினாா். இதில் பள்ளி கல்விக்கமிட்டி உறுப்பினா் ராமசாமி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com