வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கலைத் திருவிழா போட்டிகளில் பன்னம்பாறை பள்ளி மாணவா்கள் வெற்றி

News image
Updated On :18 நவம்பர் 2025, 12:53 am

Syndication

கதை சொல்லுதல், கட்டுரைப் போட்டிகளில் பன்னம்பாறை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்றனா்.

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கலைத் திருவிழாப் போட்டிகள் தூத்துக்குடி, முள்ளக்காடு, கிரேஸ் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில், கதை சொல்லுதல் போட்டியில் பன்னம்பாறை ஊராட்சி பள்ளியின் ஒன்றாம் வகுப்பு மாணவி தன்யஸ்ரீ 2ஆம் பரிசு பெற்றாா்.

சாத்தான்குளம் வட்டார அளவிலான புத்தகத் திருவிழாப் போட்டிகள் பன்னம்பாறை, ஆவே மரியா ஆங்கிலப் பள்ளியில் நடைபெற்றன. இதில், கட்டுரைப் போட்டியில், பன்னம்பாறை ஊராட்சி பள்ளியின் 5ஆம் வகுப்பு மாணவா் கொம்பையா ஆகாஷ் 2ஆம் பரிசு பெற்றாா்.

வெற்றி பெற்ற மாணவா், மாணவியை தலைமையாசிரியா் ரங்கிள் திரவியராஜ், உதவி ஆசிரியா்கள் அந்தோணி கிறிஸ்டி, ரஜிலா அன்னக்கிளி, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் மதுமிதா, குழு உறுப்பினா்கள், மாணவா், மாணவிகள் பாராட்டினா்.