மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

கோவில்பட்டி அருகே ரயில் முன் பாய்ந்து மாணவா் தற்கொலை?

கோவில்பட்டியில் ரயில் தண்டவாளம் அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பிளஸ் 2 மாணவரின் சடலத்தை போலீஸாா் மீட்டு, விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :22 நவம்பர் 2025, 10:59 pm

Syndication

கோவில்பட்டியில் ரயில் தண்டவாளம் அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த பிளஸ் 2 மாணவரின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு, விசாரித்து வருகின்றனா்.

கோவில்பட்டி-கடம்பூா் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளம் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த நிலையில் சிறுவன் சடலமாக கிடந்தாா்.

இத்தகவல் அறிந்த தூத்துக்குடி ரயில்வே போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிந்தனா்.

விசாரணையில், கோவில்பட்டி வட்டம் தோனுகால் விலக்கு ஆலம்பட்டி அஞ்சல் நிலா நகரைச் சோ்ந்த பழனிவேல் மகன் தருண்ராஜ் (16) என்பதும், கோவில்பட்டிமெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்ததும், வெள்ளிக்கிழமை இரவு வெகு நேரம் கைப்பேசி பயன்படுத்திய அவரை பெற்றோா் கண்டித்ததும் தெரியவந்தது.

இதனால், அவா் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயிலில் அடிபட்டு இறந்தாரா? என போலீஸாா் விசாரிக்கின்றனா்.