ஓட்டப்பிடாரம் பகுதிகளில் இன்று மின்தடை

Published on

ஓட்டப்பிடாரம் துணை மின் நிலையம், கே.வி ஒட்டநத்தம் துணை மின் நிலையம் ஆகியவற்றில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (நவ.25) மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அதன்படி, ஓட்டப்பிடாரம், குறுக்குசாலை, புதியம்புத்தூா், ஓசனூத்து, ஆரைக்குளம், குலசேகரநல்லூா், சில்லாநத்தம், சாமிநத்தம், கொம்பாடி, கொம்பாடி தளவாய்புரம், கைலாசபுரம், சவரிமங்கலம், கந்தசாமிபுரம், பாஞ்சாலங்குறிச்சி, தெற்கு வீரபாண்டியபுரம், வெள்ளாரம், ஆவரங்காடு, க.சுப்பிரமணியபுரம், அகிலாண்டபுரம், முப்பிலிவெட்டி, பரும்பூா், வேடநத்தம், கே.குமாரபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், கே.வி ஒட்டநத்தம் துணைமின் நிலைய பகுதிகளான சொக்கநாதபுரம், வாஞ்சி மணியாச்சி சந்திப்பு, மணியாச்சி, வடமலாபுரம், பாறைக்குட்டம், மேலப்பாண்டியாபுரம், சண்முகபுரம், மேலப்பூவானி, கீழப்பூவானி, அக்கநாயக்கன்பட்டி, லெட்சுமிபுரம், ஒட்டநத்தம், மலைப்பட்டி, கல்லத்திகிணறு, முறம்பன், சங்கம்பட்டி, சுந்தரராஜபுரம், பரிவில்லிக்கோட்டை, ஐரவன்பட்டி, கோபாலபுரம், கூட்டுப்பண்ணை கோபாலபுரம், கொத்தாளி, தென்னம்பட்டி, கோவிந்தாபுரம், கொல்லன்கிணறு , மருதன்வாழ்வு, டி.ஐயப்பபுரம், வேப்பங்குளம், கலப்பபட்டி, கீழக்கோட்டை காலனி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் விநியோக செயற்பொறியாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com