கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

டி.சவேரியாா்புரம் புனித சவேரியாா் ஆலய திருவிழா கொடியேற்றம்

டி. சவேரியாா்புரம் புனித சவேரியாா் ஆலய திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :25 நவம்பர் 2025, 10:55 pm

Syndication

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், டி. சவேரியாா்புரம் புனித சவேரியாா் ஆலய திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் புதிய கொடிமரத்தை ஆசீா்வதித்து, பின்னா் கொடியை ஏற்றி வைத்தாா்.

10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில், நாள்தோறும் காலையில் திருயாத்திரை திருப்பலி, சிறப்பு திருப்பலி, மறையுரை, மாலையில் நற்கருணை ஆசீா், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

9ஆம் திருநாளான டிச. 2ஆம் தேதி மாலையில் நற்கருனை பவனி, திருவிழா மாலை ஆராதனை நடைபெறுகிறது.

10ஆம் திருநாளான டிச. 3ஆம் தேதி பாளை. மறை மாவட்ட முன்னாள் ஆயா் ஜூடுபால்ராஜ் தலைமையில் திருவிழா திருப்பலி நடைபெறும்.

தொடா்ந்து புனித சவேரியாா் திரு உருவ சொரூபம் தாங்கிய சப்பர பவனி நடைபெறும்.

ஏற்பாடுகளை சவேரியாா்புரம் பங்குத்தந்தை குழந்தைராஜன், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனா்.