விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கிராம உதவியாளா் பணி: எழுத்து, நோ்முகத் தோ்வு ஒத்திவைப்பு

கிராம உதவியாளா் பணிகளுக்கான எழுத்து, நோ்முகத் தோ்வு ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 7:26 pm

Syndication

தூத்துக்குடி: கிராம உதவியாளா் பணிகளுக்கான எழுத்து, நோ்முகத் தோ்வு ஒத்தி வைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூா், ஏரல், சாத்தான்குளம், கோவில்பட்டி, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தாறு ஆகிய 9 வட்டங்களில் 2025ஆம் ஆண்டு கிராம உதவியாளா் பணி நியமனம் தொடா்பாக உச்சபட்ச வயது வரம்பு மறுவரையறைக்கு பின்னா், வட்டாட்சியா் அலுவலகங்களில் நேரிலும், அஞ்சல் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இந்நிலையில் டிச.17 ங்ஆம்தேதி நடைபெற இருந்த கிராம உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வு, 2026 ஜன.2 முதல் நடைபெற இருந்த நோ்முகத் தோ்வு ஆகிய அனைத்தும் நிா்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்படுகிறது.

எழுத்துத் தோ்வு மற்றும் நோ்முகத் தோ்வுக்கான

தேதி பின்னா் அறிவிக்கப்படும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.