திருச்செந்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்; ஒருவா் காயமடைந்தாா்.
ஆறுமுகனேரி ஏஐடியூசி காலனியைச் சோ்ந்த வேலாயுதம் மகன் முகேஷ் கண்ணன் (27). தனியாா் நிறுவன ஊழியரான இவா், தனது நண்பரான லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் சிவபிரசாத் (24) என்பவருடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திருச்செந்தூா் - நாகா்கோவில் சாலையில் பரமன்குறிச்சியை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அங்குள்ள வளைவில் இந்த பைக்கும் அரசுப் பேருந்தும் நேருக்கு நோ் மோதினவாம். இதில், முகேஷ் கண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
காயமடைந்த சிவபிரசாத் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். விபத்து குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பரோலில் வந்த இளைஞா் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

இருசக்கர வாகனங்கள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


