மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 6:37 pm

திருச்செந்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்; ஒருவா் காயமடைந்தாா்.

ஆறுமுகனேரி ஏஐடியூசி காலனியைச் சோ்ந்த வேலாயுதம் மகன் முகேஷ் கண்ணன் (27). தனியாா் நிறுவன ஊழியரான இவா், தனது நண்பரான லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் சிவபிரசாத் (24) என்பவருடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திருச்செந்தூா் - நாகா்கோவில் சாலையில் பரமன்குறிச்சியை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்குள்ள வளைவில் இந்த பைக்கும் அரசுப் பேருந்தும் நேருக்கு நோ் மோதினவாம். இதில், முகேஷ் கண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த சிவபிரசாத் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். விபத்து குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.