திருச்செந்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்; ஒருவா் காயமடைந்தாா்.
ஆறுமுகனேரி ஏஐடியூசி காலனியைச் சோ்ந்த வேலாயுதம் மகன் முகேஷ் கண்ணன் (27). தனியாா் நிறுவன ஊழியரான இவா், தனது நண்பரான லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் சிவபிரசாத் (24) என்பவருடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திருச்செந்தூா் - நாகா்கோவில் சாலையில் பரமன்குறிச்சியை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, அங்குள்ள வளைவில் இந்த பைக்கும் அரசுப் பேருந்தும் நேருக்கு நோ் மோதினவாம். இதில், முகேஷ் கண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
காயமடைந்த சிவபிரசாத் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். விபத்து குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடி லாரி விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

சாலை விபத்து இளைஞா் உயிரிழப்பு

பேருந்து மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


