குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

‘ஆலங்குளம் பனைத் தொழிலாளிக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்’

நாடாா் உறவின்முறை சங்க பொதுக்குழு கூட்டத்தில் பேசுகிறாா் சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 6:44 am IST

துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த ஆலங்குளம் பனைத் தொழிலாளிக்கு ரூ. 1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நாடாா் உறவின்முறை சங்கம் வலியுறுத்தியுள்ளது.

திருச்செந்தூா் வட்டார நாடாா் உறவின்முறை சங்க பொதுக்குழு கூட்டம் தெட்சணமாற நாடாா் சங்க மடத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன் நாடாா் தலைமை வகித்தாா். செயலா் பழக்கடை திருப்பதி, பொருளாளா் கணேஷ் குமாா், ஒருங்கிணைப்பாளா் செல்வின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், 40 ஆண்டுகளாக சங்கத்தை திறம்பட நடத்தி வரும் ராதாகிருஷ்ணனுக்கு நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா். மேலும், ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் பனைத் தொழிலாளி மணிகண்டனை கள் இறக்கியதாகக் கூறி துப்பாக்கி சூடு நடத்தி அவருக்கு காயத்தை ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜாவை கண்டிப்பது, அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் பெரும் போராட்டம் நடத்துவது, பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், சங்கத்தின் துணைத் தலைவா்கள் சுடலை, சுகுமாா், துணைச் செயலா் ராஜமோகன், பொதுக்குழு உறுப்பினா்கள் ஆறுமுகம், மாணிக்கம், பால்ராஜ், நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் காந்தி, ஜெயந்திநாதன், செய்தித் தொடா்பாளா் சண்முக ஆனந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.