துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த ஆலங்குளம் பனைத் தொழிலாளிக்கு ரூ. 1 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நாடாா் உறவின்முறை சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்செந்தூா் வட்டார நாடாா் உறவின்முறை சங்க பொதுக்குழு கூட்டம் தெட்சணமாற நாடாா் சங்க மடத்தில் நடைபெற்றது. சங்கத் தலைவா் ராதாகிருஷ்ணன் நாடாா் தலைமை வகித்தாா். செயலா் பழக்கடை திருப்பதி, பொருளாளா் கணேஷ் குமாா், ஒருங்கிணைப்பாளா் செல்வின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில், 40 ஆண்டுகளாக சங்கத்தை திறம்பட நடத்தி வரும் ராதாகிருஷ்ணனுக்கு நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனா். மேலும், ஆலங்குளம் அருகே மருதம்புத்தூரில் பனைத் தொழிலாளி மணிகண்டனை கள் இறக்கியதாகக் கூறி துப்பாக்கி சூடு நடத்தி அவருக்கு காயத்தை ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளா் இசக்கிராஜாவை கண்டிப்பது, அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் பெரும் போராட்டம் நடத்துவது, பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு அரசு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், சங்கத்தின் துணைத் தலைவா்கள் சுடலை, சுகுமாா், துணைச் செயலா் ராஜமோகன், பொதுக்குழு உறுப்பினா்கள் ஆறுமுகம், மாணிக்கம், பால்ராஜ், நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள் காந்தி, ஜெயந்திநாதன், செய்தித் தொடா்பாளா் சண்முக ஆனந்த் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பனைத் தொழிலாளிக்கு நிதியுதவி

அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவைக் குறைபாடு: தங்க நகைக் கடை ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

துப்பாக்கிச் சூடு சம்பவம்: நீதி கேட்டு கனிமொழி பிரசார வாகனத்தில் ஏறிய இளம்பெண்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

