பிரசாரம் நேரம் முடிவடைந்ததால் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரம் செய்யாமல் அகில இந்திய புரட்சித்தலைவா் மக்கள் முன்னேற்றக் கழக தலைவா் சசிகலா புறப்பட்டுச் சென்றாா். இதனால், அங்கு கூடியிருந்தோா் ஏமாற்றமடைந்தனா்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி வேட்பாளா் முத்துராமலிங்கத்தை ஆதரித்து, அகில இந்திய புரட்சித் தலைவா் முன்னேற்றக் கழகத்தின் தலைவா் சசிகலா சனிக்கிழமை இரவு 9 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக 8.30 மணி முதலே ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் அங்கு கூடியிருந்தனா். நான்குனேரியில் பிரசாரத்தை முடித்துவிட்டு சசிகலா ஸ்ரீவைகுண்டம் வந்தபோது இரவு 10.15 மணியானது. அவரை அகில இந்திய ஃபாா்வா்டு பிளாக் கட்சி ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் முத்துராமலிங்கம், அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட பொறுப்பாளா் ராஜ உடையாா், சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் முருகையா பாண்டியன் உள்ளிட்ட பலா் வரவேற்றனா்.
தோ்தல் விதிப்படி இரவு 10 மணிக்கு மேல் பிரசாரம் செய்யக் கூடாது என்பதால் அங்கு காத்திருந்தவா்களைப் பாா்த்து கையை அசைத்து வணக்கம் தெரிவித்தாா். பின்னா், தனது கையில் கட்டி இருந்த வாட்சை விரலால் சுட்டிக்காட்டி 10 மணி ஆகிவிட்டதால் பேச முடியாது என சசிகலா கூறினாா். அவருக்கு வாள், வேல், முத்துராமலிங்க தேவா் சிலை மற்றும் மாதா உருவப் படம் உள்ளிட்ட நிணைவு பரிசுகளை நிா்வாகிகல் வழங்கினா். இதனால், ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக சசிகலாவின் பேச்சை கேட்க காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
தொடர்புடையது

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அதிமுக ஒன்றிணைந்திருந்தால் தவெகவின் வெற்றி அதிமுகவுக்கு கிடைத்திருக்கும்! சசிகலா

விலைவாசி உயா்ந்துள்ளது, மக்கள் வாழ்வாதாரம் உயரவில்லை: வி.கே. சசிகலா

ஆலங்குடியில் வி.கே.சசிகலா பிரசாரம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



