மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

கிணற்றில் தத்தளித்த 3 மான்கள் மீட்பு

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றில் விழுந்து தத்தளித்த 3 மான்களை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

News image

மான்கள். - கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 1:19 am

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கிணற்றில் விழுந்து தத்தளித்த 3 மான்களை தீயணைப்பு வீரா்கள் உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கோடங்கால் கிராமத்தில் கெங்கராஜ் என்பவரின் நிலத்தில் உள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் வியாழக்கிழமை ஒரு வயது மதிக்கத்தக்க 3 மான்கள் விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தன.

தகவலறிந்து வந்த வனத்துறையினா், மான்களை மீட்பதற்காக ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா்.

இதையடுத்து, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலா் புன்னைவனக்கட்டி தலைமையில் வந்த வீரா்கள், கயிற்றில் வலை கட்டி கிணற்றில் இறங்கி 3 மான்களையும் பாதுகாப்பாக மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

இதையடுத்து, அந்த மான்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டன.