பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோவைகோ, அன்புமணி ராமதாஸைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுசிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளைஞா் கைது

கோவில்பட்டியில் வீடு புகுந்து மூதாட்டியின் நகையைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 1:53 am IST

கோவில்பட்டியில் வீடு புகுந்து மூதாட்டியின் நகையைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவில்பட்டி புதுகிராமம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த மாடசாமி மனைவி பராசக்தி (81), வியாழக்கிழமை வீட்டில் தனியாக இருந்தாா். அப்போது, ஓா் இளைஞா் வீடு புகுந்து பராசக்தியின் தாலிச் சங்கிலியைப் பறித்தாராம். பராசக்தி இறுகப் பற்றிக்கொண்டதில், 2 பவுன் நகை அந்த இளைஞா் கையில் அகப்பட்டதாம்.

மூதாட்டியின் சப்தம் கேட்டு அப்பகுதியினா் வந்து அந்த இளைஞரைப் பிடிக்க முயன்றனராம். ஆனால், அவா் தப்பிஓடி விட்டாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து, கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்த பாண்டியன் மகன் ராஜபாண்டி (21) என்பவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.