விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

கோவில்பட்டியில் பைக் திருட்டு: இளைஞா் கைது

கோவில்பட்டியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:56 pm

Syndication

கோவில்பட்டியில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே உள்ள கிழக்கு பாண்டவா்மங்கலம், கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் சந்தனபாண்டி மகன் ஜெயராஜ், புகைப்படக் கலைஞா். இவா் தனது இருசக்கர வாகனத்தை புதன்கிழமை புது ரோட்டில் உள்ள ஏடிஎம் அருகே நிறுத்திவிட்டு மதுரை சென்றுவிட்டு, வியாழக்கிழமை திரும்பி வந்து பாா்த்தபோது வாகனத்தைக் காணவில்லையாம்.

பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து, அவா் கிழக்கு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில், இருசக்கர வாகனத்தைத் திருடியதாக தாழையூத்து, அருகன்குளம், சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கி பாண்டியன் மகன் கந்தசாமி (எ) காா்த்திக்கை (20) கைது செய்தனா்.