மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

ஸ்ரீவைகுண்டம் சாயர்புரத்தில் நாளை ராகுல் காந்தி பிரசாரம்!

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி சாயா்புரத்தில் திங்கள்கிழமை (ஏப்.20) பிரசாரம் செய்கிறாா்.

News image

ராகுல் காந்தி

Updated On :19 ஏப்ரல் 2026, 1:59 am IST

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி சாயா்புரத்தில் திங்கள்கிழமை (ஏப்.20) பிரசாரம் செய்கிறாா்.

இந்நிலையில், அவா் பிரசாரம் செய்யும் இடம், வாகனங்கள் நிற்கும் இடங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஷ், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவரும் ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதி வேட்பாளருமான ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்வதற்காக விமானம் மூலம் திருவனந்தபுரம் வரும் ராகுல் காந்தி, அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலுக்கு வருகிறாா். அங்கு பகல் 11.30 மணிக்கு நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறாா்.

 சாயா்புரத்தில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ளும் இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த டிஎஸ்பி சுரேஷ், வேட்பாளா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ்.

சாயா்புரத்தில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ளும் இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்த டிஎஸ்பி சுரேஷ், வேட்பாளா் ஊா்வசி எஸ்.அமிா்தராஜ்.

அதைத் தொடா்ந்து பிற்பகல் 1 மணிக்கு நான்குனேரியிலும், பிற்பகல் 2.15 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குள்பட்ட சாயா்புரத்திலும் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

பின்னா், இரவு 8 மணி அளவில் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் தில்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறாா்.