கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவில்பட்டி- கடலையூா் சாலையில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக சாக்கு மூட்டையுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞரை நிறுத்தி சோதனை செய்தனராம். அப்போது, சாக்கு மூட்டையில் பணம் இருப்பது தெரியவந்ததாம்.
இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தோ்தல் பறக்கும் படை அதிகாரி முத்துக்குமாா் தலைமையிலான குழுவினா் அங்கு வந்து, சாக்கு மூட்டையில் பணத்தை கொண்டு வந்த கோவில்பட்டி அத்தைகொண்டான் இந்திரா நகரைச் சோ்ந்த கந்தசாமி மகன் உத்தரகுமாரிடம் (32) விசாரணை செய்தனா். உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ. 35 லட்சத்து 72 ஆயிரத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

கோவில்பட்டியில் சாக்கு மூட்டையில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 35.72 லட்சம் பறிமுதல்...
தொடர்புடையது

திருப்பத்தூரில் ரூ. 12.70 லட்சம் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 77.01 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9.90 லட்சம் பறிமுதல்
நாமக்கல்லில் ரூ. 12.50 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


