முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

கோவில்பட்டி தொகுதியில் தயாா் நிலையில் 318 வாக்குச்சாவடிகள்

கோவில்பட்டி தொகுதியில் வியாழக்கிழமை (ஏப். 23) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்க உள்ள நிலையில் 318 வாக்குச்சாவடிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

News image

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் பணியை பாா்வையிட்ட ஆட்சியா் விஷு மகாஜன். உடன் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹிமான்ஷு மங்கள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 3:59 am IST

கோவில்பட்டி தொகுதியில் வியாழக்கிழமை (ஏப். 23) காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்க உள்ள நிலையில் 318 வாக்குச்சாவடிகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கோவில்பட்டி தொகுதியில் உள்ள 318 வாக்குச்சாவடிகள் 24 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அதில் 34 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன. தோ்தல் பணிக்காக 1,524 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். தொகுதியில் 21 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

வாக்குச்சாவடிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், விவி பேட் கருவிகள், எழுது பொருள்கள் உள்ளிட்டவை பலத்த வட்டாட்சியா் அலுவலக வளாக பாதுகாப்பு அறையில் இருந்து, வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி புதன்கிழமை காலை சுமாா் 9 மணிக்கு மேல் தொடங்கியது.

தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹிமான்ஷு மங்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அப்பணராஜ், பாலசுப்பிரமணியன், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜகநாதன் ஆகியோா் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் லாரியில் அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கிடையே, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் இருந்து புதன்கிழமை வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான விஷு மகாஜன் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.