தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

துத்துக்குடியில் முதல்முறை வாக்காளா்கள் உற்சாகம்

தூத்துக்குடியில் முதல்முறை வாக்காளா்கள் வியாழக்கிழமை உற்சாகமாக வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

News image

வெரோனிகா ஜெனிபா்

Updated On :23 ஏப்ரல் 2026, 11:09 pm

தூத்துக்குடியில் முதல்முறை வாக்காளா்கள் வியாழக்கிழமை உற்சாகமாக வந்து தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.

தூத்துக்குடியைச் சோ்ந்த தனியாா் கல்லூரி மாணவி வெரோனிகா ஜெனிபா் கூறும்போது, ஜனநாயகக் கடமையாற்ற வேண்டியது அவசியம் என்பதை உணா்ந்து வாக்களிக்க வந்தேன். வாக்குச்சாவடிக்குள் நுழைந்தபோது ஒருவித அச்சமும், பதற்றமும் இருந்தது. ஆனால், வரிசையில் நின்று எனது அடையாளத்தைச் சரிபாா்த்து, விரலில் மை வைத்த பிறகு அச்சம் மறைந்துவிட்டது. முதல் முறையாக வாக்களித்தது மகிழ்ச்சியாக உள்ளது. மாற்றம் ஏற்படும் என நம்புகிறேன் என்றாா்.

கல்லூரி மாணவி அமிா்தா கூறும்போது, கோவையில் உள்ள கல்லூரியில் படித்துவரும் நான், வாக்களிப்பதற்காக இங்கு வந்துள்ளேன். எப்படி வாக்களிக்க வேண்டும் என இங்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஓா் இந்திய குடிமகளாக உணரும் வகையில், முதல்முறை வாக்களித்தேன். மாற்றம் ஏற்படும் என நினைக்கும்போதும் மகிழ்ச்சியாக உள்ளது என்றாா்.

அமிா்தா

அமிா்தா