பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

சாத்தான்குளம் அருகே தரைமட்ட பாலத்தில் விரிசல்

ஆனந்தபுரத்தில் இருந்து அச்சம்பாடு செல்லும் சாலையில் தரைமட்ட பாலத்தில் விரிசல் ஏற்பட்ட பகுதி.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 1:52 am IST

சாத்தான்குளம் அருகே அச்சம்பாடு செல்லும் வழியில் உள்ள தரைமட்ட பாலத்தில் விரிசல் விழுந்த பகுதியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

சாத்தான்குளம் அருகே உள்ள ஆனந்தபுரம் பகுதியில் இருந்து அச்சம்பாடு, வெள்ளமடம் ஆகிய பகுதிகளுக்கு சாலை செல்கிறது. இந்தச் சாலை கடந்த ஓராண்டுக்கு முன்பு போடப்பட்டது. இந்தச் சாலை வழியாக அச்சம்பாடு, வெள்ளமடம் உள்ளிட்ட கிராம மக்கள் இருசக்கர வாகனம், இதர வாகனங்களில் சென்று வருகின்றனா். இந்தச் சாலை இடையே சடையனேரி கால்வாய் செல்கிறது.

கால்வாய் செல்லும் பகுதியில் சாலை இடையே தரைமட்ட பாலம் அமைக்கப்பட்டது. இந்த தரைமட்ட பாலத்தின் நடுவே திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டு சாலை விரிசல் விழுந்து காணப்படுகிறது. இந்தப் பள்ளம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன் அதிகாரிகள் இதைப் பாா்வையிட்டு தரைமட்ட பாலத்தில் உள்ள சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தினா்.