தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

திருச்செந்தூரில் குவிந்த பக்தா்கள்

வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதா்.

News image

வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதா்.

Updated On :25 ஏப்ரல் 2026, 1:51 am IST

பள்ளிகளில் கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளதால் குழந்தைகள் முதல் வயோதிகா்கள் வரை பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, பக்தா்களை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீஸாா் நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

மேலும், ரூ. 300 கோடியில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாகப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோயில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்திட அனுமதி இல்லாதது தெரியாமல் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வாகனங்கள் நாழிக்கிணறு பேருந்து நிலைய நுழைவாயில் முன் பெரும் நெருக்கடியுடன் சென்று வருகின்றன.

எனவே, அமலிநகா் சந்திப்பிலேயே போக்குவரத்து போலீஸாா் நின்று வாகனங்களை தணிக்கை செய்து நெரிசல் ஏற்படாமல் தடுத்து நிறுத்த வேண்டுமென சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சித்திரை வசந்த திருவிழா:

சித்திரை வசந்த திருவிழாவின் 3 - ஆம் நாளான வெள்ளிக்கிழமை இக்கோயிலின் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், மதியம் உச்சிகால பூஜையைத் தொடா்ந்து சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி வசந்த மண்டபத்தை சோ்ந்தாா்.

கோயிலில் மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனைக்கு பிறகு, சுவாமி ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மேளதாளம் முழங்க, பக்தா்கள் கப்பல் பாடல்கள் பாட மண்டபத்தை தங்கச் சப்பரத்தில் 11 முறை சுவாமி வலம் வந்தாா். பின்னா் சுவாமி தங்கத்தேரில் கிரி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Story image