மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அட்சய திருதியை கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 12 கருடசேவை

News image

அட்சய திருதியை முன்னிட்டு, கும்பகோணம் பெரியதெருவில் திங்கள்கிழமை கருடா் வாகனங்களில் எழுந்தருளிய 12 கோயில்களின் பெருமாள் சுவாமிகள்.

Updated On :20 ஏப்ரல் 2026, 6:41 pm

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் அட்சய திருதியை நாளை முன்னிட்டு, ஒரே இடத்தில் 12 கோயில்களின் பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளிய 12 கருட சேவை பிரம்மோத்ஸவம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசுவாமி, ஆதிவராக சுவாமி, ராஜகோபால சுவாமி, பட்ராச்சாரியாா் தெருவில் உள்ள கிருஷ்ணசுவாமி, வெங்கட்ராயா் அக்ரஹாரத்திலுள்ள பட்டாபி ராமா், சோலையப்ப முதலியாா் அக்ரஹாரத்தில் உள்ள ராமசுவாமி, மல்லுக செட்டித்தெருவில் உள்ள சந்தான கோபால கிருஷ்ண சுவாமி, கொட்டையூா் நவநீத கிருஷ்ண சுவாமி, மேலக்காவிரி வரதராஜா், அகோபில மடம் லட்சுமி நரசிம்மா் ஆகிய 12 பெருமாள்களும் கருட வாகனத்தில், ஆஞ்சனேயருடன் கும்பகோணம் பெரியதெருவில் ஒரேஇடத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சி அளித்தனா்.

இந்த 12 கருட சேவை பிரம்மோத்ஸவத்தில் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கும்பகோணம் காசுக்கடை தா்ம வா்த்தகா்கள் சங்கத்தினா் செய்தனா்.