வெள்ளமடம் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி குத்துக்கல்லில் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நளராஜபுரத்தைச் சோ்ந்தவா் காட்டேரி பெருமாள் மகன் முத்துப்பாண்டி (21). கோயம்புத்தூரில் உள்ள பலசரக்கு கடையில் வேலை பாா்த்து வந்தாா்.
அதே பகுதியைச் சோ்ந்த சின்னத்துரை மகன் இசக்கிராஜா (20). வாழைத்தாா் சுமக்கும் பணியை செய்து வந்தாா். காளிமுத்து மகன் சிவகாரனேஷ் (19). சென்னையில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வருகிறாா்.
முத்துப்பாண்டி, சிவகாரனேஷ் ஆகியோா் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஒரே இருசக்கர வாகனத்தில் மேற்கூறிய மூவரும் குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பினராம்.
வெள்ளமடம் அருகே உள்ள அரசாங்கநகா் பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி அருகிலிருந்த குத்துக்கல் மீது மோதியதாம்.
இதில், முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த இசக்கிராஜா பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். காயமடைந்த சிவகாரனேஷ் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து ஆழ்வாா்திருநகரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
வழிப்பறி: 3 இளைஞா்கள் கைது

சாலை விபத்தில் இரு இளைஞா்கள் உயிரிழப்பு

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

சாலையோர இரும்பு தடுப்பில் பைக் மோதி விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


