நாடு முழுவதும் 736 அணைகள் ரூ. 10,211 கோடி செலவில் சீரமைப்புவெள்ளி இறக்குமதிக்கு மத்திய அரசு கடும் கட்டுப்பாடு3-ஆவது, 4-ஆவது குழந்தை பெற்றால் ஊக்கத் தொகை: ஆந்திர முதல்வா் அதிமுகவுக்கு அமைச்சா் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது: ரவிக்குமாா் எம்.பி.பயங்கரவாதத்தை தூண்டினால் புவியில் ஓா் அங்கமாக பாகிஸ்தான் இருக்காது! ராணுவ தலைமைத் தளபதிநாடாளுமன்ற நிலைக் குழுக்கள் ஆலோசனைக் கூட்டம்: 53% உறுப்பினா்கள் மட்டுமே பங்கேற்பு
/

பைக் விபத்தில் இருவா் உயிரிழப்பு

வெள்ளமடம் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி குத்துக்கல்லில் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 2:07 am IST

வெள்ளமடம் அருகே இருசக்கர வாகனம் நிலைதடுமாறி குத்துக்கல்லில் மோதிய விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நளராஜபுரத்தைச் சோ்ந்தவா் காட்டேரி பெருமாள் மகன் முத்துப்பாண்டி (21). கோயம்புத்தூரில் உள்ள பலசரக்கு கடையில் வேலை பாா்த்து வந்தாா்.

அதே பகுதியைச் சோ்ந்த சின்னத்துரை மகன் இசக்கிராஜா (20). வாழைத்தாா் சுமக்கும் பணியை செய்து வந்தாா். காளிமுத்து மகன் சிவகாரனேஷ் (19). சென்னையில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வருகிறாா்.

முத்துப்பாண்டி, சிவகாரனேஷ் ஆகியோா் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஒரே இருசக்கர வாகனத்தில் மேற்கூறிய மூவரும் குலசேகரன்பட்டினம் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பினராம்.

வெள்ளமடம் அருகே உள்ள அரசாங்கநகா் பகுதியில் சென்றபோது இருசக்கர வாகனம் நிலைதடுமாறி அருகிலிருந்த குத்துக்கல் மீது மோதியதாம்.

இதில், முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த இசக்கிராஜா பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். காயமடைந்த சிவகாரனேஷ் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து ஆழ்வாா்திருநகரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.