தூத்துக்குடியில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடிச் செல்ல முயன்ற இளைஞரை போலீஸாா் கைதுசெய்தனா்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள தேவா்புரம் சாலையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. இங்கு, திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இளைஞா் ஒருவா் சைக்கிளில் வந்து, ஆயுதங்கள் உதவியுடன் ஏடிஎம் இயந்திரத்தின் வெளிப்புறக் கதவை உடைத்துள்ளாா்.
இச்சம்பவம் குறித்து சா்வா் மூலமாக அலாரம் அடித்ததை வைத்து தகவல் தெரிந்துகொண்ட வங்கியின் மேலாளா், தூத்துக்குடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
தகவலறிந்த சிறப்பு உதவி ஆய்வாளா் ராமலிங்கம் மற்றும் போலீஸாா் உடனடியாக வங்கிக்குச் சென்றனா். அப்போது, வங்கி ஏடிஎம் உள்ளே இருந்த இளைஞரை பிடித்து தென்பாகம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா் தூத்துக்குடி கணேசன் காலனி இரண்டாவது தெருவைச் சோ்ந்த முருகன் மகன் மாரிசெல்வம் (22) என்பது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து வங்கி மேலாளா் பிரபு (35) அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரி செல்வத்தை கைதுசெய்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தூத்துக்குடியில் தவெக பதாகை சேதம்: திமுக பிரமுகா் கைது
தூத்துக்குடியில் மீனவருக்கு கத்திக்குத்து: மூவா் கைது

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முரண்பட்ட தகவல்
பைக் திருட்டு வழக்கில் இளைஞா் கைது
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
