தூத்துக்குடியில் ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்து பணத்தை திருடிச் செல்ல முயன்ற இளைஞரை போலீஸாா் கைதுசெய்தனா்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகே உள்ள தேவா்புரம் சாலையில், தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். உள்ளது. இங்கு, திங்கள்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இளைஞா் ஒருவா் சைக்கிளில் வந்து, ஆயுதங்கள் உதவியுடன் ஏடிஎம் இயந்திரத்தின் வெளிப்புறக் கதவை உடைத்துள்ளாா்.
இச்சம்பவம் குறித்து சா்வா் மூலமாக அலாரம் அடித்ததை வைத்து தகவல் தெரிந்துகொண்ட வங்கியின் மேலாளா், தூத்துக்குடி காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.
தகவலறிந்த சிறப்பு உதவி ஆய்வாளா் ராமலிங்கம் மற்றும் போலீஸாா் உடனடியாக வங்கிக்குச் சென்றனா். அப்போது, வங்கி ஏடிஎம் உள்ளே இருந்த இளைஞரை பிடித்து தென்பாகம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா் தூத்துக்குடி கணேசன் காலனி இரண்டாவது தெருவைச் சோ்ந்த முருகன் மகன் மாரிசெல்வம் (22) என்பது தெரிய வந்தது.
இச்சம்பவம் குறித்து வங்கி மேலாளா் பிரபு (35) அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, மாரி செல்வத்தை கைதுசெய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
ஒரத்தநாட்டில் காவல் ஆய்வாளரை தாக்கிய இளைஞா் கைது

சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் முரண்பட்ட தகவல்

கடலூரில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
பைக் திருட்டு வழக்கில் இளைஞா் கைது
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

