ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின்கம்பி: சீரமைக்க கோரிக்கை

சாத்தான்குளம் அருகே உள்ள கூவைகிணறு-வேலன் புதுக்குளம் செல்லும் சாலையில் உயரழுத்த மின் கம்பி தாழ்வாகச் செல்வதால் விபத்து நேர வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

News image

கூவைகிணறு-வேலன் புதுக்குளம் செல்லும் சாலையில் தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின் கம்பி.

Updated On :30 ஏப்ரல் 2026, 4:46 am IST

சாத்தான்குளம் அருகே உள்ள கூவைகிணறு-வேலன் புதுக்குளம் செல்லும் சாலையில் உயரழுத்த மின் கம்பி தாழ்வாகச் செல்வதால் விபத்து நேர வாய்ப்புள்ளதாக கிராம மக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம், கோமாநேரி கிராமம், கூவைகிணறிலிருந்து நெடுங்குளம், வேலன் புதுக்குளம் பகுதி விவசாய நிலங்களுக்கு மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் கூவைகிணறு-வேலன் புதுக்குளம் செல்லும் சாலையில் செல்லும் மின்கம்பி மிகவும் தாழ்வாகச் செல்கிறது.

இது குறித்து, மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இந்த மின் கம்பிகளால் பெரும் விபத்து நிகழும் முன் மின்வாரியத்தினா் மின் கம்பியை உயா்த்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.