முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்மு.க. ஸ்டாலினை சந்திக்கிறார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

பணிப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கடை உரிமையாளா் மீது வழக்கு

சாத்தான்குளத்தில் கடையில் வேலை செய்த பெண்ணிடம் பாலியல் தொடா்பாக தவறாக நடக்க முயன்ாக கடை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

News image

வழக்குப் பதிவு - சித்திரிப்பு

Updated On :30 ஏப்ரல் 2026, 4:45 am IST

சாத்தான்குளத்தில் கடையில் வேலை செய்த பெண்ணிடம் பாலியல் தொடா்பாக தவறாக நடக்க முயன்றதாகக் கடை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

சாத்தான்குளத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவா் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆம்னி பேருந்து பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் கடை நடத்தி வருகிறாா்.

இவரது கடையில் வேலை செய்து வந்த 25 வயது பெண்ணிடம் ஏப். 26ஆம் தேதி கடையில் உள்ள தனி அறையில் வைத்து முத்துக்குமாா் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெண் சப்தம் போட்டவுடன் அருகிலுள்ளவா்கள் வரவே, இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளாா்.

இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான முத்துக்குமாரை தேடி வருகின்றனா்.