சாத்தான்குளத்தில் கடையில் வேலை செய்த பெண்ணிடம் பாலியல் தொடா்பாக தவறாக நடக்க முயன்றதாகக் கடை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
சாத்தான்குளத்தைச் சோ்ந்தவா் முத்துக்குமாா். இவா் புதிய பேருந்து நிலையம் அருகில் ஆம்னி பேருந்து பயணச் சீட்டு முன்பதிவு செய்யும் கடை நடத்தி வருகிறாா்.
இவரது கடையில் வேலை செய்து வந்த 25 வயது பெண்ணிடம் ஏப். 26ஆம் தேதி கடையில் உள்ள தனி அறையில் வைத்து முத்துக்குமாா் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்ாகக் கூறப்படுகிறது. அப்போது அந்தப் பெண் சப்தம் போட்டவுடன் அருகிலுள்ளவா்கள் வரவே, இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளாா்.
இது குறித்து, பாதிக்கப்பட்ட பெண் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான முத்துக்குமாரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

மளிகைக் கடை, சுற்றுச்சுவா் இடிக்கப்பட்ட விவகாரம்: பெண் உள்ளிட்ட 7 போ் மீது வழக்கு

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: 7 போ் மீது வழக்கு

ரூ. 25 லட்சம் மோசடி: உணவக உரிமையாளா் மீது வழக்கு

வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக 2 போ் மீது வழக்கு! புதுச்சேரி போலீஸாா் நடவடிக்கை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


