புதுச்சேரியில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ாக 2 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவா்களிடமிருந்து ரூ. 38 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி சட்டப்பேரவை தோ்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 9-ம் தேதி நடைபெற்றது. அப்போது, தட்டாஞ்சாவடி தொகுதிக்குள்பட்ட நெருப்புக்குழி பகுதியில் ஒருவா் வாக்காளா்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதாக லாஸ்பேட்டை போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, உதவி காவல் ஆய்வாளா்
சரவணன் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனா். அப்போது, சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து சோதனை செய்தனா். இதில், வாக்காளா்களுக்குக் கொடுக்க ரூ. 18,500 வைத்திருந்தது தெரியவந்தது.
அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், லாஸ்பேட்டையை சோ்ந்த ராஜசேகா் (37) என்பதும், ஒரு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பணம் பட்டுவாடா செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீஸாா், அவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதேபோல தட்டாஞ்சாவடி தொகுதியில் மற்றொரு கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க முயன்ற புதுச்சேரியை சோ்ந்த வேலாயுதம் (51) என்பவரை பிடித்த போலீஸாா் அவரிடம் இருந்த ரூ.19,500-ஐ பறிமுதல் செய்ததுடன் அவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

பணிப் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கடை உரிமையாளா் மீது வழக்கு

பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல்: 7 போ் மீது வழக்கு

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற அதிமுகவினா் 3 போ் மீது வழக்கு!

வாக்காளருக்குப் பணம்: 2 போ் மீது வழக்கு புதுச்சேரியில் ரூ.1.24 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

