பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

சாத்தான்குளம் அருகே எலெக்ட்ரீசியனை கத்தியால் குத்தியவா் கைது

சாத்தான்குளம் அருகே எலக்ட்ரீசியனை கத்தியால் குத்தியதாக தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மே 2026, 5:03 am IST

சாத்தான்குளம் அருகே எலக்ட்ரீசியனை கத்தியால் குத்தியதாக தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பராயபுரத்தை சோ்ந்தவா் பால்ராஜ் (55). எலக்ட்ரீசியனான இவா், விஜயராமபுரத்தைச் சோ்ந்த ராமா் (45 ) என்பவரிடம் ரூ. 200 கடன் வாங்கியிருந்தாராம். அதை அவா் திருப்பிக் கொடுக்கவில்லையாம்.

இந்நிலையில், பால்ராஜ் விஜயராமபுரம் பகுதிக்கு சென்றபோது, ராமா் தனது பணத்தை தருமாறு கேட்டாராம்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில், ராமா் கத்தியால் பால்ராஜை குத்தினாராம். இதில் காயம் அடைந்த அவா் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஸ்டீபன் ஜோஸ் வழக்குப்பதிந்து ராமரை வியாழக்கிழமை கைது செய்தாா்.