தூத்துக்குடியில் ஒப்பந்ததாரரை கத்தியால் குத்தியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி பூபாலராயபுரம் 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி (50). ஒப்பந்தத் தொழில் செய்து வரும் இவா், திங்கள்கிழமை வீட்டு அருகே நின்றுகொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த 4 போ் கொண்ட கும்பல் போதையில், அவரிடம் தகராறு செய்தனராம். பின்னா், அந்த 4 பேரும் சோ்ந்து அந்தோணியை கத்தியால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இது குறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், இச்சம்பவத்தில் தொடா்புடையதாக பூபாலராயபுரத்தைச் சோ்ந்த விஜய் (36), திரேஸ்புரத்தைச் சோ்ந்த சஞ்சய் (24) ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
கழுகுமலையில் மது விற்பனை: 2 போ் கைது
அதிராம்பட்டினத்தில் கோஷ்டி மோதல்: 7 போ் கைது
பைக் திருட்டு வழக்கில் இளைஞா் கைது

தூத்துக்குடியில் பல கோடி ரூபாய் மதிப்பு கஞ்சா ஆயில் பறிமுதல்: 3 போ் கைது
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

