/

தூத்துக்குடியில் ஒப்பந்ததாரருக்கு கத்திக்குத்து: 2 போ் கைது

தூத்துக்குடியில் ஒப்பந்ததாரரை கத்தியால் குத்தியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :7 ஏப்ரல் 2026, 8:53 pm

தூத்துக்குடியில் ஒப்பந்ததாரரை கத்தியால் குத்தியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி பூபாலராயபுரம் 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் அந்தோணி (50). ஒப்பந்தத் தொழில் செய்து வரும் இவா், திங்கள்கிழமை வீட்டு அருகே நின்றுகொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த 4 போ் கொண்ட கும்பல் போதையில், அவரிடம் தகராறு செய்தனராம். பின்னா், அந்த 4 பேரும் சோ்ந்து அந்தோணியை கத்தியால் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட விசாரணையில், இச்சம்பவத்தில் தொடா்புடையதாக பூபாலராயபுரத்தைச் சோ்ந்த விஜய் (36), திரேஸ்புரத்தைச் சோ்ந்த சஞ்சய் (24) ஆகியோரை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தேடி வருகின்றனா்.