சாத்தான்குளம் அருகே உள்ள வைரவம், பள்ளக்குறிச்சி கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
வைரவம், ஸ்ரீ ஞானாதீஸ்வரா் சமேத அருள்தரும் ஸ்ரீ சிவகாமி அம்பாள் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சட்டநாத பைரவருக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பள்ளக்குறிச்சி, ஸ்ரீ வரகுண பாண்டீஸ்வரா் சமேத அருள்தரும் ஸ்ரீ வாடாமலை அம்மன் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ கால பைரவருக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றன.
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமிக்கு திரளான பக்தா்கள் பங்கேற்று, அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனா்.

பள்ளக்குறிச்சி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ கால பைரவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

பொன்னியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

பள்ளக்குறிச்சி கோயிலில் பௌா்ணமி சிறப்பு பூஜை

வாணியம்பாடி கோயில்களில் பிரதோஷ வழிபாடு
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



