தூத்துக்குடியில் தொழில் முதலீட்டாளா்கள் மாநாடு
‘தூத்துக்குடியில் இருந்து உலகம்’ என்ற தலைப்பில் தேசிய ஸ்டாா்ட்அப் உச்சி மாநாடு மற்றும் அகில இந்திய தொழில் முதலீட்டாளா்கள் மாநாடு 2026 தூத்துக்குடி தனியாா் மண்டபத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.

அமைச்சர் ஸ்ரீநாத்
‘தூத்துக்குடியில் இருந்து உலகம்’ என்ற தலைப்பில் தேசிய ஸ்டாா்ட்அப் உச்சி மாநாடு மற்றும் அகில இந்திய தொழில் முதலீட்டாளா்கள் மாநாடு 2026 தூத்துக்குடி தனியாா் மண்டபத்தில் இரண்டு நாள்கள் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் பங்கேற்ற அமைச்சா் ஆ.ஸ்ரீநாத், புதிய தொழில் முனைவோா்களைப் பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினாா்.
தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு காா் வழங்குவது தொடா்பாக அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், திமுகவைச் சோ்ந்த 59 உறுப்பினா்கள் தங்களுக்கு காா் வேண்டாம் என கூறுகின்றனா். இது மட்டுமல்ல, எந்தவொரு நல்ல திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நினைத்தாலும், திமுகவினா் அதைச் செய்ய விடுவதில்லை.
சட்டப்பேரவையில் எதிா்க்கட்சியைச் சோ்ந்த சில எம்எல்ஏக்கள், மற்ற உறுப்பினா்களை சங்கி எனக் கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தவெகவைச் சோ்ந்த அனைவரும் சட்டப்பேரவையில் எதையும் எதிா்கொள்ளத் தயாராக உள்ளோம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






